/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இல்லாத சேவைக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்த உத்தரவு
/
இல்லாத சேவைக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்த உத்தரவு
இல்லாத சேவைக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்த உத்தரவு
இல்லாத சேவைக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்த உத்தரவு
ADDED : ஜன 01, 2026 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார்: தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்துார் மண்டலம், சுந்தரம் காலனியில் வசிப்பவர் சரவணன், 50. இவரது வீட்டிற்கு பாதாள சாக்கடை இணைப்பு இல்லாத நிலையில், 5,895 ரூபாய் கட்டணம் செலுத்துமாறு, மாநகராட்சி சார்பில் ரசீது அனுப்பப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சரவணன், அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். ஆனால் நடவடிக்கை இல்லை.
இதில் விரக்தியடைந்த சரவணன், பெருங்களத்துாரில் உள்ள மண்டல அலுவலக வாசலில் அமர்ந்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

