/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
/
திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
திருடனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மக்கள்
ADDED : ஏப் 28, 2025 02:13 AM
ஓட்டேரி:ஓட்டேரி, ஜமாலியா, இ.எஸ்.ஐ., குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை, வாலிபர் ஒருவர் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்தார்.
குடியிருப்புவாசிகளை கண்டதும் தப்ப முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்து, தர்ம அடி கொடுத்து, ஓட்டேரி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்த தினேஷ், 19, என்பதும், சென்னை ஓட்டேரியில் தங்கி, பைக் மெக்கானிக் வேலை செய்துவந்ததும் தெரிந்தது.
மேலும், அந்த குடியிருப்பில் உள்ள ஜெயகுமார், 50 என்பவரது மொபைல்போனை திருடியது தெரிந்தது. வாலிபரிடம் இருந்து மொபைல்போனை பறிமுதல் செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.