/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொக்லைன் ஓட்டுநர் மயங்கி விழுந்து பலி
/
பொக்லைன் ஓட்டுநர் மயங்கி விழுந்து பலி
ADDED : ஜன 03, 2025 12:18 AM
மப்பேடு: திருவள்ளூர் மாவட்டம், கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ், 41. இவருக்கு மரகதம், 35, என்ற மனைவியும் 17, 15 வயதில் இரு மகள்களும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
மப்பேடு அடுத்த சமத்துவபுரம் சிப்காட் பகுதியில், நேற்று முன்தினம், பொக்லைன் இயந்திரத்தை இயக்கும் பணியில் செல்வராஜ் ஈடுபட்டிருந்தார். திடீரென, ஓட்டுநர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே செல்வராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தார். செல்வராஜ் மனைவி புகாரின்படி, மப்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

