sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 புத்தாண்டு இரவு மின் தடை: கொசுக்கடியால் மக்கள் அவதி

/

 புத்தாண்டு இரவு மின் தடை: கொசுக்கடியால் மக்கள் அவதி

 புத்தாண்டு இரவு மின் தடை: கொசுக்கடியால் மக்கள் அவதி

 புத்தாண்டு இரவு மின் தடை: கொசுக்கடியால் மக்கள் அவதி


ADDED : ஜன 02, 2026 05:44 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: குன்றத்துார் அருகே, திருமுடிவாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு, ஆங்கில புத்தாண்டை மக்கள் கொண்டா டிய நிலையில், இரவு 12:30 மணிக்கு, குன்றத்துார் சுற்றுபுறத்தில், காற்றுடன் இரண்டு மணி நேரம் மழை பெய்தது.

இதனால், திருமுடிவாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் சோமங்கலம், நடுவீரப் பட்டு, பூந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

அதிகாலை 4:00 மணிக்கே, மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'புத்தாண்டு இரவு மின் தடையால், இரவு முழுதும் கொசுக்கடியால் துாக்கமின்றி தவித்தோம்.

மின்வாரிய அலுவலகத் தை பலமுறை தொடர்பு கொண்டும் அலுவலர்கள் போனை எடுக்கவில்லை' என்றனர்.

5 மணி நேரம் அதேபோல், செங்குன்றம் சந்தை, ஜி.என்.டி., சாலை, நாரவாரிகுப்பம், வடகரை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 11:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டது.

செங்குன்றம் தற்காலிக பேருந்து நிலையம் அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால், மின் தடை ஏற்பட்டது தெரியவந்தது. மாலை 5:00 மணி வரை மின் தடை நீடித்தது.

ஐந்து மணி நேரத்திற்கு மேல், புத்தாண்டு நாளில் இரு ளில் தவித்ததாக, மக்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us