sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மாநகராட்சி வாகனங்களை பராமரிக்க தனி பணிமனை அமைக்க கோரிக்கை

/

மாநகராட்சி வாகனங்களை பராமரிக்க தனி பணிமனை அமைக்க கோரிக்கை

மாநகராட்சி வாகனங்களை பராமரிக்க தனி பணிமனை அமைக்க கோரிக்கை

மாநகராட்சி வாகனங்களை பராமரிக்க தனி பணிமனை அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 31, 2025 12:11 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை பராமரிக்க, தனியாக பெட்ரோல் பங்க் மற்றும் பணிமனை அமைக்க வேண்டும் என்று, கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம்பரம் மாநகராட்சி, 70 வார்டுகள், ஐந்து மண்டலங்களை கொண்டுள்ளன. இம்மாநகராட்சியில், குப்பை அகற்றும் பணியில்,360 லோடு ஆட்டோக்கள், 60 டிராக்டர்கள்,ஒன்பது காம்பாக்டர் வாகனங்கள் உள்ளன.

இதைதவிர, அதிகாரிகளுக்கான வாகனங்கள், ஜே.சி.பி., நாய் மற்றும் மாடு பிடிக்கும் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.

இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புதல், பழுது பார்த்தல் ஆகிய பணிகளுக்காக, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவாகிறது. அதேநேரத்தில், முறையாக பழுது சரிசெய்யாததால், சில மாதங்களிலேயே மீண்டும் வாகனங்கள் பழுதாவதும் தொடர்கிறது. இதனால், மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது.

அதனால், தாம்பரம் மாநகராட்சியில், வாகனங்களை பராமரிக்க தனியாக பெட்ரோல் பங்க், பணிமனை அமைத்தால், மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் சேமிப்பாகும். வாகனங்களையும் உடனுக்குடன் சரிசெய்ய ஏதுவாக இருக்கும்.

உயர் அதிகாரிகள் ஆலோசித்து, தனியாக பெட்ரோல் பங்க் மற்றும் பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us