/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரை தாக்கிய ரவுடிக்கு ' காப்பு '
/
வாலிபரை தாக்கிய ரவுடிக்கு ' காப்பு '
ADDED : ஆக 04, 2025 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு:வாலிபரை வழிமறித்து தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 24. கடந்த 26ம் தேதி, ஒரு கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக தாக்கியது.
இதில், பலத்த காயமடைந்த மாதவன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், வழக்கில் தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு சிவராஜபுரத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளி நவீன், 19, என்பவரை, புளியந்தோப்பு போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.