sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நள்ளிரவில் எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு மூச்சுத்திணறலால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு

/

நள்ளிரவில் எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு மூச்சுத்திணறலால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு

நள்ளிரவில் எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு மூச்சுத்திணறலால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு

நள்ளிரவில் எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு மூச்சுத்திணறலால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு


ADDED : மே 17, 2025 12:16 AM

Google News

ADDED : மே 17, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்குடி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் சேகரமாகும் குப்பை, லாரிகளில் எடுத்து வந்து பெருங்குடி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், திடீரென குப்பை கிடங்கில் தீப்பற்றி, தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால், குப்பை கிடங்கை சுற்றியுள்ள குடியிருப்புகள் மற்றும் வேளச்சேரி பிரதான சாலை, குரோம்பேட்டை- - துரைப்பாக்கம் ரேடியல் சாலைகளில் புகை மண்டலம் சூழ்ந்தது.

அதனால், குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலில் அவதிப்பட்டனர். பின், அப்பகுதிவாசிகள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்ததனர்.

வேளச்சேரி, கோட்டூர்புரம், திருவான்மியூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், அசோக் நகர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து, ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், 14 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

சம்பவம் குறித்து, பள்ளிகரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us