/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலக ஸ்குவாஷ் வீரருக்கு ரூ.11 லட்சம்
/
உலக ஸ்குவாஷ் வீரருக்கு ரூ.11 லட்சம்
ADDED : டிச 19, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் நடந்து முடிந்த உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியில், இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. அணியின் கேப்டனும், அர்ஜுனா விருது பெற்ற குருநானக் கல்லுாரி மாணவருமான அபய் சிங்கிற்கு, வேளச்சேரியில் உள்ள கல்லுாரி வளாகத்தில், நேற்று காலை பாராட்டு விழா நடந்தது.
விழாவில், மத்திய அரசின் விருது பெற்று சாதனை படைத்த அபய் சிங்கிற்கு, 11 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது.
மேலும் கேலோ இந்தியா, அகில இந்திய விளையாட்டு, தேசிய போட்டிகளில் சாதனை படைத்த அதே கல்லுாரி மாணவர்களுக்கு, மொத்தம் 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை, கல்லுாரி சார்பில் அபய் சிங் வழங்கினார்.

