/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் குழாய் இணைப்பு பணி 2 மண்டலங்களில் மாற்று ஏற்பாடு
/
கழிவுநீர் குழாய் இணைப்பு பணி 2 மண்டலங்களில் மாற்று ஏற்பாடு
கழிவுநீர் குழாய் இணைப்பு பணி 2 மண்டலங்களில் மாற்று ஏற்பாடு
கழிவுநீர் குழாய் இணைப்பு பணி 2 மண்டலங்களில் மாற்று ஏற்பாடு
ADDED : மார் 05, 2024 12:34 AM
சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனத்தால், பெருங்குடி மண்டலம், ஓ.எம்.ஆர்., நேரு நகர், கந்தன்சாவடி பகுதியில், கழிவுநீர் பிரதான உந்து குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், இன்றும், நாளையும் எல்.பி., சாலையில் உள்ள கழிவுநீர் உந்து நிலையம் செயல்படாது. இதன் காரணமாக, அடையாறு மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில், இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேற வாய்ப்புள்ளது.
அதுபோன்ற நேரத்தில், கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் கொண்டு கழிவுநீர் வெளியேற்றப்படும்.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு, 81449 30909 என்ற எண்ணிலும், அடையாறு மண்டலத்திற்கு, 81449 30913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் கூறினர்.

