sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சொத்துக்காக தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

/

சொத்துக்காக தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

சொத்துக்காக தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

சொத்துக்காக தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை


ADDED : ஏப் 28, 2025 02:09 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் காந்தி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கும், இவரது மகன் ஜெபரிஷ், 23, என்பவருக்கும், இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது.

இந்த விவகாரத்தில் எந்தவித சமரசத்துக்கும் வராததால், தந்தை மீது ஜெபரிஷுக்கு கடும் கோபம் இருந்து வந்தது. சொத்தை விட்டு கொடுக்காத தந்தையை தீர்த்துக்கட்ட, அவர் முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 2023 ஜூலை 14ல் பாலசுப்பிரமணியன் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஜெபரிஷ், தந்தை என்றும் பாராமல் கிரிக்கெட் மட்டை, இரும்பு கம்பியால் அவரை அடித்து கொலை செய்தார்.

இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபரிஷை கைது செய்தனர். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தாய் சுப்புலட்சுமி மீதும், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, சென்னை 19வது கூடுதல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது.

போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் எஸ். தனசேகரன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெபரிஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபாராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

அதேநேரம், சுப்புலட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அவரை விடுதலை செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us