/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணிமனைகளில் மழைநீர் தேக்கம் மாநகர பஸ்கள் நிறுத்துவதில் சிரமம்
/
பணிமனைகளில் மழைநீர் தேக்கம் மாநகர பஸ்கள் நிறுத்துவதில் சிரமம்
பணிமனைகளில் மழைநீர் தேக்கம் மாநகர பஸ்கள் நிறுத்துவதில் சிரமம்
பணிமனைகளில் மழைநீர் தேக்கம் மாநகர பஸ்கள் நிறுத்துவதில் சிரமம்
ADDED : அக் 26, 2024 02:52 AM
சென்னை,:சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், மாநகர பேருந்துகளை பராமரித்து இயக்க வசதியாக 32 இடங்களில் பணிமனைகள் உள்ளன. இவற்றில் சில, பேருந்து நிலையங்களைவிட, தாழ்வான பகுதிகளில் இருக்கின்றன.
தி.நகர், வடபழனி, பூந்தமல்லி, வியாசர்பாடி, பெரம்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட பணிமனைகளில், சாதாரண மழைக்கே, தண்ணீர் தேங்கி விடுகிறது.
இதுவே, கனமழை பெய்தால், குளம் போல் மழைநீர் தேங்கி, பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
இது குறித்து, மாநகர பஸ் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் சிலர் கூறியதாவது:
பெரும்பாலான பேருந்து நிலையங்களை, சிமென்ட் தளம் அமைத்து உயரம் உயர்த்தப்படுகிறது. அப்போது, அருகே இருக்கும் பணிமனைகளை, அதற்கு ஏற்றார்போல், பணிமனை உயரம் அதிகரிப்பதில்லை.
இதனால், பணிமனை உள்ளே மழைநீர் புகுந்து விடுகிறது. கனமழை பெய்யும்போது, மாநகர பேருந்துகளில் பழுதும் ஏற்படுகிறது.
சமீபத்தில் கனமழை பெய்தபோது, வடபழனி பணிமனையில் இருந்த 100க்கும் மேற்பட்ட பேருந்துகள், கோயம்பேடில் உள்ள பணிமனைக்கு உடனடியாக மாற்றம் செய்யப்பட்டது.
எனவே, பேருந்து நிலையத்தின் உயரத்துக்கு ஏற்றார்போல், பணிமனைகளையும் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும்.
அதேபோல், மழை பெய்தவுடன் தண்ணீர் தடையின்றி செல்ல போதிய இணைப்பு கால்வாய்களை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.