sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கஞ்சா எண்ணெய் கடத்தல் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

/

கஞ்சா எண்ணெய் கடத்தல் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

கஞ்சா எண்ணெய் கடத்தல் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை

கஞ்சா எண்ணெய் கடத்தல் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை


ADDED : செப் 22, 2024 08:32 PM

Google News

ADDED : செப் 22, 2024 08:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே, போதைப்பொருள் கடத்தப்படுவதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த நபரை பிடித்து, போலீசார் விசாரித்தனர்.

இதில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜு, 35, என்பதும், அவர் வைத்திருந்த பையில் 'ஹாஷிஷ்' எனும் கஞ்சா எண்ணெய் மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, 'ராஜு மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே அவருக்கு, 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1.2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us