sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

/

மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்

மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம்


ADDED : மார் 15, 2024 12:44 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா, நாளை முதல், வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காவல் துறை செய்திக் குறிப்பு:

பங்குனி பெருவிழா முடியும் வரை, கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி, வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

 ராயப்பேட்டை நெடுஞ்சாலையிலிருந்து, லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள், லஸ் சர்ச் சாலை - டி.சில்வா சாலை - பக்தவச்சலம் சாலை - ரங்கா சாலை - சி.பி.ராமசாமி சாலை - காமராஜர் சாலை - ஸ்ரீனிவாசா அவென்யூ - ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று, கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்

 அடையாறிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக, ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை - திருவேங்கடம் தெரு - வெங்கட கிருஷ்ணா சாலை - சிருங்கேரி மடம் சாலை, வாரன் சாலை, ரங்கா சாலை - கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்

 ஆழ்வார்பேட்டை சந்திப்பிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள், ஆலிவர் சாலை - பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு - விவேகானந்தா கல்லுாரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்

 வரும் 18ம் தேதி அதிகார நந்தி திருவிழா அன்று காலை, 5:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரையிலும், 22ம் தேதி தேர் திருவிழா அன்றும், 23ம் தேதியன்று அறுபத்து மூவர் திருவிழா முடியும் வரையில், மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

தடை


அதிகார நந்தி, தேர் திருவிழா, அறுபத்து மூவர் திருவிழா நாட்களில் நான்கு மாட வீதிகள், ராமகிருஷ்ணா மடம் சாலை ஆகிய இடங்களில், எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

வாகன நிறுத்துமிடங்கள்


1. கிழக்கு அபிராமபுரத்திலிருந்து வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை, சாய்பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரகாரம், திருமயிலை பறக்கும் ரயில்வே நிலையங்களில் நிறுத்திக் கொள்ளலாம்

2. ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்களை, லஸ் சர்ச் சாலை, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3. செயின்ட் மேரீஸ் சாலை மந்தைவெளி வீதியிலிருந்து வருவோர், பி.எஸ்.பள்ளி அருகே உள்ள கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்

4. காவல் துறை வாகனங்களை, சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்திக் கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us