sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பைக் திருடி நம்பர் பிளேட் மாற்றி விற்ற இருவர் கைது

/

பைக் திருடி நம்பர் பிளேட் மாற்றி விற்ற இருவர் கைது

பைக் திருடி நம்பர் பிளேட் மாற்றி விற்ற இருவர் கைது

பைக் திருடி நம்பர் பிளேட் மாற்றி விற்ற இருவர் கைது


ADDED : ஜூன் 15, 2025 08:24 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 08:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர்:அண்ணாநகரில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர்.

அண்ணா நகர் கிழக்கு, 22வது குறுக்கு தெருவில் உள்ள விடுதியில் வசித்து வருபவர் கவுதம், 22.

இவர், கடந்த 7 ம் தேதி இரவு விடுதி வாசலில், கே.டி.எம்., டியூக் பைக்கை நிறுத்திச் சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, பைக்கை திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கபிலன், 24, அர்ஜூன், 22 ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஆறு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், ஒரே ஊரை சேர்ந்த பட்டதாரியான இருவரும், அண்ணா நகர், திருமூலர் காலனியில் தங்கி, படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால், ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்தனர்.

உணவு டெலிவரி செய்ய செல்லும் இடங்களில், கண்ணில் படும் பைக்குளை குறிவைத்து திருடியுள்ளனர். அவற்றின் நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்தியதும், ஊருக்கு எடுத்து சென்று விற்றதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us