ADDED : டிச 27, 2024 08:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்:புழலில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கிடைத்த தகவலின் அடிப்படையில், சூளகிரிக்கு தனிப்படை போலீசார் சென்றார்.
அங்குள்ள பேருந்து நிலையில், மூவரை பிடிக்க முற்பட்ட போது, இருவர் சிக்கினர்; ஒருவர் தப்பியோடினார். பிடிபட்ட இருவரிடம் விசாரித்த போது, அவர்கள் கர்நாடகாவை சேர்ந்த முகமது நகீப், 24 மற்றும் சையது இம்ரான் பாஷா, 43 என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2.6 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரையும் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவு நபரை தேடி வருகின்றனர்.