ADDED : ஜூலை 10, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல், திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 33; டூரிஸ்ட் வேன் ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் வெங்கடேசன், 42, என்பவரின் வீட்டின் முன், வேனை நிறுத்தி விட்டு துாங்கச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் சத்தம் கேட்ட நிலையில், வெளியே வந்து பார்த்தபோது, வேன் கண்ணாடியை வெங்கடேசன் இரும்பு கம்பியால் உடைத்து சேதப்படுத்தியதை கண்டு அதிர்ந்தார்.
வெங்கடேசனிடம் கேட்ட போது, 'என் வீட்டின் முன் வேனை நிறுத்தினால் கண்ணாடியை உடைப்பேன்' எனக்கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, புழல் காவல் நிலையத்தில் அண்ணாமலை புகார் அளித்தார். வழக்குப்பதிந்த போலீசார், வெங்கடேசனை கைது செய்தனர்.