sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூதாட்டியை தாக்கி நகை பணம் திருடிய பெண் கைது

/

மூதாட்டியை தாக்கி நகை பணம் திருடிய பெண் கைது

மூதாட்டியை தாக்கி நகை பணம் திருடிய பெண் கைது

மூதாட்டியை தாக்கி நகை பணம் திருடிய பெண் கைது


ADDED : செப் 15, 2025 01:00 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி; வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 87. கடந்த 11ம் தேதி மதியம், இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர், மூதாட்டியை தாக்கி, பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றார்.

பலத்த காயமடைந்த மூதாட்டி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரின் விசாரணையில், மூதாட்டிக்கு பழக்கமான அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரியா , 20, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

விசாரணையில், 'சம்பவத்தன்று மூதாட்டியிடம் சுப்ரியா கடன் கேட்டுள்ளார். மூதாட்டி மறுக்கவே, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சுப்ரியா தள்ளிவிடவே, கீழே விழுந்த மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, பீரோவில் இருந்த 1.80 லட்சம் ரூபாய் மற்றும் 20 சவரன் நகைகளை, சுப்ரியா திருடிச் சென்றது தெரிய வந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us