/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டின் உரிமையாளரிடம் நகை திருடிய பெண் கைது
/
வீட்டின் உரிமையாளரிடம் நகை திருடிய பெண் கைது
ADDED : ஆக 11, 2025 01:42 AM

வடபழனி:வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டு சாவியை திருடி, நகை, பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வடபழனி, திருநகர் 2வது தெருவை சேர்ந்தவர் விவேக், 37. இவரது வீட்டின் சாவி, கடந்த ஜூன் மாதம் தொலைந்து விட்டது. பின், கடந்த 5ம் தேதி, வரலட்சுமி பூஜைக்காக வீட்டின் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துள்ளார்.
அப்போது அதில், 28 கிராம் நகை மற்றும் 10,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரையடுத்து, வடபழனி போலீசார் விசாரித்தனர். அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, விவேக் வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் தேவிகலா, 44, என்பவர், சாவியை திருடியது தெரியவந்தது.
மேலும், விவேக் வீட்டில் இல்லாத போது, அந்த சாவியை பயன்படுத்தி, வீட்டில் நுழைந்து, நகை மற்றும் பணத்தை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து, வடபழனி திருநகரை சேர்ந்த தேவிகலாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 26 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.