ADDED : ஜன 08, 2025 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்:எண்ணுார், அசோக் லேலண்ட் நிறுவனம் பின்புறம், நேற்று முன்தினம் இரவு, ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கொருக்குபேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடலை மீட்ட போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இறந்தவர் யார் என்பது குறித்து, விசாரித்து வருகின்றனர்.