sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோதனை ஓட்டம் துவங்கி 18 மாசம் ஆச்சுஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நீரேற்று நிலையத்தில் விவசாயிகள் புகார்

/

சோதனை ஓட்டம் துவங்கி 18 மாசம் ஆச்சுஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நீரேற்று நிலையத்தில் விவசாயிகள் புகார்

சோதனை ஓட்டம் துவங்கி 18 மாசம் ஆச்சுஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நீரேற்று நிலையத்தில் விவசாயிகள் புகார்

சோதனை ஓட்டம் துவங்கி 18 மாசம் ஆச்சுஒரு சொட்டு தண்ணீர் கூட வரலே நீரேற்று நிலையத்தில் விவசாயிகள் புகார்


ADDED : செப் 03, 2024 01:50 AM

Google News

ADDED : செப் 03, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்;'அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சியில், ஏழு குட்டைகளுக்கும், இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை,' என உதவி பொறியாளர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அக்கரை செங்கப்பள்ளி விவசாயிகள், நேற்று அன்னுார் அருகே குன்னத்தூராம் பாளையத்தில் உள்ள அத்திக்கடவு திட்ட ஆறாவது நீரேற்று நிலைய அதிகாரிகளிடம் கூறியதாவது:

எங்கள் ஊராட்சி விவசாயத்தை நம்பி உள்ளது.

அங்குள்ள ஏழு குட்டைகள் அத்திக்கடவு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, பிரதான குழாய், கிளைக் குழாய்கள் பதிக்கப்பட்டு, ஓ.எம்.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 2023 பிப்ரவரியில் அத்திக்கடவு திட்ட சோதனை ஓட்டம் துவங்கியது.

அன்னுார், கரியாம்பாளையம், காரே கவுண்டம்பாளையம், கஞ்சப்பள்ளி ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீர் விடப்பட்டது. ஆனால் எங்கள் ஊராட்சியில் உள்ள 27 ஏக்கர் பரப்பளவு வையாளிபாளையம் குட்டை, ஐந்து ஏக்கர் தொட்டிபாளையம் குட்டை, தலா மூன்று ஏக்கருள்ள வாக்கனாங் கொம்பு, நகமரத்தான் குட்டைகள், தலா இரண்டு ஏக்கர் உள்ள காரனுார் மற்றும் ராமே கவுண்டன்புதூர் குட்டை என ஏழு குட்டைகளிலும் இதுவரை சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை.

ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.

தற்போது பவானி ஆற்றில் அதிகளவு நீர் வருகிறது. தற்போது உபரி நீர் வரத்து உள்ளதால், உடனடியாக எங்கள் ஊராட்சியில் உள்ள குட்டைகளுக்கு தண்ணீர் விட வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தனர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உதவி பொறியாளர்கள், விவசாயிகளிடம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us