/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கனமழை தொடரும் பில்லுாரில் 28 மி.மீ.,
/
கனமழை தொடரும் பில்லுாரில் 28 மி.மீ.,
ADDED : மே 17, 2024 01:04 AM
கோவை;பில்லுார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 28 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு:
பீளமேடு விமான நிலையம் - 4.50 மி.மீ., வேளாண் பல்கலை - 7, பெரியநாயக்கன்பாளையம் - 2, மேட்டுப்பாளையம் - 1.5, கோவை தெற்கு தாலுகா - 2.5, சூலுார் - 4, வாரப்பட்டி - 6, தொண்டாமுத்துார் - 18.
மதுக்கரை தாலுகா - 8, போத்தனுார் - 10, பொள்ளாச்சி - 3.8, மாக்கினாம்பட்டி - 8, கிணத்துக்கடவு - 2, ஆனைமலை - 2, ஆழியார் - 13, சின்கோனா - 9, சின்னக்கல்லார் - 13, வால்பாறை பி.ஏ.பி., 10, வால்பாறை தாலுகா - 9, சோலையார் - 11 மி.மீ.,
பில்லுார் அணை - 28, சிறுவாணி அடிவாரம் - 8, சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி - 12 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அணையின் நீர் மட்டம், 10.04 அடியாக உயர்ந்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக நேற்று மூன்று கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.
வரும், 19ம் தேதி வரை மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

