sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாதுகாப்பு பணியில் 4,363 போலீசார்

/

பாதுகாப்பு பணியில் 4,363 போலீசார்

பாதுகாப்பு பணியில் 4,363 போலீசார்

பாதுகாப்பு பணியில் 4,363 போலீசார்


ADDED : ஏப் 17, 2024 12:53 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கோவையில், பாதுகாப்பு பணியில் 4,363 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் வரும், 19 ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலும், தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் இணைந்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. இதையடுத்து பாதுகாப்பு பணிகளை போலீசார் பலப்படுத்தியுள்ளனர்.

மாநகரில், 2,763 போலீசார், 800 ஊர்க்காவல்படையினர், 300 சிறப்பு போலீசார், 350 துணை ராணுவப்படையினர் என, 4,363 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

மாநகரில் லோக்சபா தேர்தலை அமைதியாக நடத்த தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் தவிர, 133 ரோந்து வாகனங்கள் இருக்கும். மேலும், 20 விரைவுப்படை குழுக்கள் பாதுகாப்பு பணியில் இருப்பர். ஓட்டுச்சாவடிகளில், ஏதாவது பிரச்னை என்றால் இக்குழுவினர் உடனடியாக அங்கு சென்று அதை சரிசெய்வர். இவர்களுடன் 10 அதிரடிப்படையினரும் பணியில் இருப்பர். தேர்தலை முன்னிட்டு, இதுவரை, 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பிரசாரம் நிறைவடைவதால், வெளியூரை சேர்ந்தவர்கள் கோவை லோக்சபா தொகுதியில் இருக்கக் கூடாது.

பிரசாரம் முடிந்தவுடன் அவரவர் ஊருக்கு செல்ல வேண்டும். வெளியூர் நபர்கள் தங்கியிருப்பது குறித்து லாட்ஜ்கள், திருமண மண்டபங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளன.

இவ்வாறு, அவர் கூறினார்.

மூன்றடுக்கு பாதுகாப்பு

ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில்(ஜி.சி.டி.,)பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு ஜி.சி.டி., கல்லுாரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட உள்ளது. துணை ராணுவம், ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் என, இப்பாதுகாப்பு வளையம் இருக்கும். ஒவ்வொரு அறைக்கும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்கப்படும். பதட்டமான ஓட்டு எண்ணும் மையங்களுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.








      Dinamalar
      Follow us