sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகளில் நிறைய பணிகள்: பராமரிப்புக்கு நிதி வரலை

/

பள்ளிகளில் நிறைய பணிகள்: பராமரிப்புக்கு நிதி வரலை

பள்ளிகளில் நிறைய பணிகள்: பராமரிப்புக்கு நிதி வரலை

பள்ளிகளில் நிறைய பணிகள்: பராமரிப்புக்கு நிதி வரலை


ADDED : மார் 30, 2024 11:46 PM

Google News

ADDED : மார் 30, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவையில் அரசு பள்ளிகளுக்கு இதுவரை, பள்ளி பராமரிப்பு இரண்டாம் தவணை தொகை விடுவிக்கப்படவில்லை, என தலைமையாசிரியர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பராமரிப்பு நிதி ஆண்டு தோறும் விடுவிக்கப்படும்.

இந்நிதியை பயன்படுத்தியே, பள்ளிகளில் பல்வேறு பழுதுகள் சரி செய்தல், பராமரிப்பு பணிகள், கற்றல் உபகரணங்கள் கொள்முதல் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். கடந்த சில ஆண்டுகளாக, இந்நிதி, 50 சதவீதமாக பிரித்து இரண்டு தவணையில் வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான முதல் தவணை தொகை கடந்த, அக்.,-நவ., மாதம் விடுவிக்கப்பட்டது. இரண்டாம் தவணை ஜன., மாதம் விடுவிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கல்வியாண்டு முடியும் நிலையிலும், இதுவரை பராமரிப்பு நிதி வழங்கப்படவில்லை.

அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'இரண்டாம் கட்ட தவணை நிதி ஜன., மாதம் வழங்கப்படும், அதனை மார்ச் 31ம் தேதிக்குள் செலவிட வேண்டியது அவசியம். பல பள்ளிகளில் அத்தியாவசியம் என்பதால், ஆசிரியர்கள் சொந்த செலவில் பல பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

நிதி செலவிட இன்றே(மார்ச் 31) கடைசி நாள்; ஆனால், நிதி இதுவரை பள்ளிகளுக்கு விடுவிக்கப்படவில்லை. பல பராமரிப்பு பணிகள் நிலுவையில் உள்ளன' என்றார்.






      Dinamalar
      Follow us