sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆதார் மையத்தை அதிகரிக்கணும்!

/

ஆதார் மையத்தை அதிகரிக்கணும்!

ஆதார் மையத்தை அதிகரிக்கணும்!

ஆதார் மையத்தை அதிகரிக்கணும்!


ADDED : ஜூன் 28, 2024 11:49 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்தில் கூடுதல் ஆதார் சேவை மையம் துவங்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தங்களின் ஆதார் திருத்தம் செய்ய கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையம் மற்றும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் செயல்படும் மையத்துக்கு மட்டுமே செல்கின்றனர்.

இந்த இரண்டு இடங்களில் மட்டும் புதிய ஆதார் பதிவு செய்தல் மற்றும் திருத்தங்கள் போன்றவைகள் செய்து தரப்படுகிறது. இங்கு, தினமும் தலா 20 முதல் 25 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது.

கிணத்துக்கடவு போஸ்ட் ஆபீசில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையத்திலும், பணியாளர் இல்லாததால் இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு மக்கள் ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ள முடியாமல் தினம் தோறும் வந்து செல்கின்றனர்.

எனவே, மக்கள் நலன் கருதி அந்தந்த ஊராட்சிகளில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அல்லது இ - சேவை மையங்களில் ஆதார் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us