ADDED : ஜூன் 18, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில், 1972ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், 30 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு, பேச்சு போட்டி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
52 ஆண்டுகள் கழித்து சந்தித்த மாணவர்கள், ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர். வரும் சுதந்திர தினத்தன்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக, முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.