/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மட்டையுடன் தேங்காய் ஆனைமலையில் ஏலம்
/
மட்டையுடன் தேங்காய் ஆனைமலையில் ஏலம்
ADDED : ஜூலை 23, 2024 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், மட்டை தேங்காய் நேற்று ஏலம் விடப்பட்டது.
வேளாண் உழவர் நலத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கோவை விற்பனைக்குழு சார்பில், மட்டையுடன் தேங்காய் மறைமுக ஏலம் நேற்று ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்தது.
ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தலைமை வகித்தார்.நேற்று, 4,010 தேங்காய்கள் வந்தன. ஒரு தேங்காய் விலை குறைந்த பட்சம், 10 ரூபாய்க்கும், அதிக பட்சமாக, 11 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மூன்று விவசாயிகள், ஐந்து வியாபாரிகள் பங்கேற்றனர்.