sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

/

சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?

சீருடை அணியாத ஆட்டோ ஓட்டுநர்கள்; ஒழுங்கு நடவடிக்கை பாயுமா?


ADDED : ஜூலை 10, 2024 10:11 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், சீருடை அணியாமலும், ஓட்டுநர் இருக்கையில் மற்றொருவரையும் அமர வைத்து ஆட்டோ இயக்கும், ஓட்டுநர்களின் அடாவடியைப் போலீசார் தடுக்க வேண்டும்.

பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியில், ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரின் அடாவடி செயலால், பிற வாகன ஓட்டுநர்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், சீருடை அணிவது கிடையாது. ஜீன்ஸ் பேன்ட் அல்லது லுங்கியுடன் ஆட்டோக்களை இயக்குகின்றனர். அதேபோல, எந்தவொரு திருப்பங்களிலும், 'இன்டிக்கேட்டர்' போடாமலும், அதிவேகமாகவும் பிற வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வகையில் ஆட்டோக்களை இயக்குகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, சாலையோரங்களை ஆக்கிரமித்து ஆட்டோ நிறுத்தங்களை ஏற்படுத்துதல், ஷேர் ஆட்டோ என்ற பெயரில் அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் செல்வது, ஓட்டுநர் இருக்கையில் மற்றொருவரையும் அமரச் செய்தல் சிலர், அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இத்தகைய ஓட்டுநர்களைக் கண்டறிந்து, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

மக்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி நகரில் இருந்து ஒரே ஊருக்கு, ஆட்டோ ஓட்டுநர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட தொகை கேட்கின்றனர். ஆட்டோக்களில், மீட்டர் அடிப்படையிலான ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பது கிடையாது.

இதுமட்டுமல்லாமல், விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்களைக் கண்டறிந்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்கக் கூடாது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us