/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குரும்பபாளையத்தில் ரத்த தான முகாம்
/
குரும்பபாளையத்தில் ரத்த தான முகாம்
ADDED : ஜூன் 22, 2024 05:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை குரும்பபாளையத்தில் இயங்கி வரும் ஆனந்த சைதன்யா பவுண்டேஷன் சார்பில், ரத்த தான முகாம் நடந்தது.
கோவை நேருநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த ரத்த தான முகாம், காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை நடந்தது. ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், ரத்த தானம் பெறப்பட்டது. மேக் கன்ட்ரோல் நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுக்கு, ஆனந்த சைதன்யா பவுண்டேஷன் நிறுவனர் தில்லை செந்தில்குமார் முன்னிலை வகித்தார். 52 பேர் ரத்த தான முகாமில் பங்கேற்றனர்.