/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரியாம்பாளையத்தில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
/
கரியாம்பாளையத்தில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
கரியாம்பாளையத்தில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
கரியாம்பாளையத்தில் நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம்
ADDED : ஆக 04, 2024 10:27 PM
அன்னுார் : கரியாம்பாளையத்தில், மூன்று ஊராட்சிகளுக்கு, நாளை 'மக்களுடன் முதல்வர்' முகாம் நடக்கிறது.
ஊரகப் பகுதிகளில், செப்., 14 வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடக்கும் என, தமிழக அரசு, அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 62 முகாம்கள் நடக்கின்றன.
அன்னூர் தாலுகாவில் மூன்று முகாம்கள் முடிந்து விட்டன. நான்காவது முகாம் நாளை (6ம் தேதி) கரியாம்பாளையம், செல்வநாயகி அம்மன் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
இதில் கரியாம்பாளையம், பிள்ளையப்பம்பாளையம், காரேகவுண்டம் பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த, பொதுமக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகள் குறித்து உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மனுக்கள் பெறப்படும்.
மசக்கவுண்டன் செட்டிபாளையம், குப்பேபாளையம் மற்றும் காட்டம்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, வரும் 8ம் தேதி கணேசபுரம், காளியப்பா திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது.
முகாமில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, மின்வாரியம், ஆதி திராவிடர் நலத்துறை, வேளாண்மை, மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் துறை உள்பட, 15 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். 44 சேவைகள் வழங்கப்படுகின்றன.