/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் தொழில்துறையினரை இன்று சந்திக்கிறார் ம.பி., முதல்வர்
/
கோவையில் தொழில்துறையினரை இன்று சந்திக்கிறார் ம.பி., முதல்வர்
கோவையில் தொழில்துறையினரை இன்று சந்திக்கிறார் ம.பி., முதல்வர்
கோவையில் தொழில்துறையினரை இன்று சந்திக்கிறார் ம.பி., முதல்வர்
ADDED : ஜூலை 25, 2024 04:15 AM

கோவை: மத்திய பிரதேசத்தில் தொழில் துவங்க முன்வரும் தமிழக தொழில்துறையினருக்கு பல்வேறு சலுகைகளை வழங்க, அம்மாநில அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், இன்று கோவையில் நடக்கும் நிகழ்ச்சியில் தொழில்துறையினரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுகிறார்.
மத்திய பிரதேசத்தில் பல்வேறு சலுகைகளுடன் தொழில் துவங்க வருமாறு, அம்மாநில அரசு தமிழக தொழில்துறையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது. அம்மாநில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை குழுவினர் கோவையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு, தொழில்துறையினரை சந்தித்து இதுதொடர்பாக பேசியுள்ளனர்.
இதையடுத்து, தொழில்துறையினரை அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் நேரில் சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு அக்குழு ஏற்பாடு செய்துள்ளது; இன்று கோவை லீ மெரிடியன் ஓட்டலில், காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை, இந்நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், தொழில்துறையினர் மற்றும் பிரதிநிதிகளின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு ம.பி., முதல்வர் பதில் அளிக்கிறார். மேலும், அம்மாநிலத்தில், தொழில் துறையினருக்கான வாய்ப்புகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், அரசு உதவிகள் உள்ளிட்ட தொழில் துறையினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து அவர் விவரிக்கவுள்ளார்.
ஜவுளி மற்றும் பின்னலாடை தொழில், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல்ஸ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்துறை பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.