/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை குற்றாலம்: வனத்தில் சடலம் மீட்பு
/
கோவை குற்றாலம்: வனத்தில் சடலம் மீட்பு
ADDED : மே 01, 2024 12:01 AM
தொண்டாமுத்தூர்;கோவை குற்றாலம் வனப்பகுதியில், அடையாளம் தெரியாத அழுகிய நிலையில், ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
போளுவாம்பட்டி வனச் சரகத்திற்குட்பட்ட பகுதியில், வனத்துறையினர், வரையாடு கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், போளுவாம்பட்டி வனச்சரக பணியாளர்கள் முருகன், மருதமணி, உதயவாணன், காளிமுத்து, கணேஷ் ஆகியோர் கள ஆய்விற்கு, கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அருகில் உள்ள தேன்வரை சரக பகுதிக்கு சென்றனர். அங்கு, அழுகிய நிலையில், சுமார், 45 வயதுடைய ஆண் சடலம் கிடந்ததை கண்டனர்.
இதுகுறித்து, வன வருக்கும், காருண்யா நகர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசாரும், வனத்துறையினரும் சென்று, உடலை மீட்டுவிசாரிக்கின்றனர்.