/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துாய்மைப்பணியை விரைந்து முடிக்க கமிஷனர் 'அட்வைஸ்'
/
துாய்மைப்பணியை விரைந்து முடிக்க கமிஷனர் 'அட்வைஸ்'
ADDED : ஆக 07, 2024 11:44 PM
கோவை: துாய்மைப்பணிகளை விரைந்து முடிக்க, பணியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் அறிவுறுத்தினார்.
கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட தடாகம் ரோட்டில், நடைபெற்று வரும் துாய்மைப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து வார்டு, 69க்கு உட்பட்ட பாரதிபார்க் பகுதியில், மாநகராட்சி துாய்மை பணிகளுக்காக பாரதி பார்க் மகளிர் சங்கம் சார்பில், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான குப்பைத்தொட்டிகள், சாக்குகள், முறம், விசில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரனிடம், சங்கத் தலைவர் கரிஸ்மா ரஹேஜா மற்றும் நிர்வாகிகள் பொருட்களை வழங்கினர்.