sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகளில் புத்தகங்கள் இருப்பு திறக்கும் நாளில் வழங்க முடிவு

/

பள்ளிகளில் புத்தகங்கள் இருப்பு திறக்கும் நாளில் வழங்க முடிவு

பள்ளிகளில் புத்தகங்கள் இருப்பு திறக்கும் நாளில் வழங்க முடிவு

பள்ளிகளில் புத்தகங்கள் இருப்பு திறக்கும் நாளில் வழங்க முடிவு


ADDED : மே 31, 2024 11:12 PM

Google News

ADDED : மே 31, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;தொடக்கக் கல்வி வாயிலாக, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் ஏழு ஒன்றியங்களில் உள்ள, 530 பள்ளிகளில், 26,355 மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன.

தொடக்கக் கல்வித்துறையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு, வால்பாறை, ஆனைமலை, சுல்தான்பேட்டை, மதுக்கரை, கிணத்துக்கடவு என, ஏழு ஒன்றியங்கள் உள்ளன.

இங்கு, 425 தொடக்கப் பள்ளிகள், 105 நடுநிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளி மாணவர்களுக்கு, 2024-25ம் கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்காக, அந்தந்த வட்டார கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பள்ளி திறக்கும் நாளில் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தொடக்கக் கல்வித் துறையில், ஒன்று முதல், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளன. அவ்வகையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றிங்களில், 26,355 மாணவ, மாணவியருக்கான பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன. அந்தந்த பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பள்ளி திறப்புக்கு முன், துாய்மைப் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. உள்ளாட்சி துாய்மைப் பணியாளர்களைக் கொண்டு, வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டும் வருகின்றன.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us