/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சில் வைர, தங்க நகைகள் மாயம்
/
பஸ்சில் வைர, தங்க நகைகள் மாயம்
ADDED : ஆக 01, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : பஸ்ஸில் காணாமல் போன தங்க, வைர நகைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தி, 45. இவர் கோவை டவுன்ஹாலில் இருந்து, கவுண்டம்பாளையத்துக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.
கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரிடம் இருந்த நான்கு பவுன் தங்க செயின், வைர கம்மல், ரொக்கம், 45 ஆயிரம் ரூபாய் ஆகியவை காணாமல் போய் இருந்தது. இது குறித்து, கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.