/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கணும்! நகராட்சி கமிஷனர் பேச்சு
/
நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கணும்! நகராட்சி கமிஷனர் பேச்சு
நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கணும்! நகராட்சி கமிஷனர் பேச்சு
நகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கணும்! நகராட்சி கமிஷனர் பேச்சு
ADDED : ஆக 31, 2024 02:10 AM

பொள்ளாச்சி;''நகரின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான திட்டங்கள் குறித்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதித்தால் பயனாக இருக்கும்,'' என, நகராட்சி அவசர கூட்டத்தில் கமிஷனர் கணேசன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், அவசர கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார்.
செந்தில்குமார் (தி.மு.க.,): கடந்த, இரண்டரை ஆண்டுகளாக பட்ஜெட் போடாமல் உள்ளது. வரவு, செலவு குறித்து தகவல்கள் தெரிவதில்லை.
கமிஷனர்: பட்ஜெட் போடாமல் இருக்க முடியாது. அடுத்த கூட்டங்களில், பட்ஜெட் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படும். தனிப்பட்ட அலுவலர்கள் குறித்து தாக்கி விவாதிக்க வேண்டாம். குற்றம் சாட்டுவதை தவிர்த்து, நகராட்சிக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்தலாம், வருமானத்தை எவ்வாறு பெருக்கலாம் என்ற ஆக்கப்பூர்வமான விஷயங்களை பேசினால் பயனாக இருக்கம்.
துணைத்தலைவர் கவுதமன்: அலுவலர்கள், வேலை செய்தால் அவர்களை விமர்ச்சிக்க வேண்டியதில்லை. புண்புடுத்துவது நோக்கமில்லை.
கமிஷனர்: பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கலாம். நகராட்சிக்கு தேவையான பணிகளை செய்ய, கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
துணைத்தலைவர்: நல்ல விஷயங்களுக்கு துணை இருப்போம்.
பாலமுருகன் (தி.மு.க.,): அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆக்க வேண்டாம் எனக்கூறுவது ஏற்க கூடியது. ஆனால், அவர்கள் பணி செய்யாததால் கவுன்சிலர்கள் மன உளைச்சல் ஆகின்றனர்.
கமிஷனர்: ஒவ்வொரு கவுன்சிலரையும் மக்கள் பிரதிநிதியாக பார்க்கிறேன். நிச்சயம் உங்களது பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், அதிகாரிகளை திட்டினால் தான் அந்த பணி நடக்கும் என்பது இல்லை. இனி மாற்றம் நிச்சயம் இருக்கும்.
செந்தில்குமார் (தி.மு.க.,): கமிஷனர், இந்த மாதம் தான் வந்துள்ளேன்; அடுத்த மாதம் பணிகள் குறித்து கேட்கலாம் என கூறுகிறார்.
கமிஷனர்: எஸ்கேப் ஆகவில்லை; எப்பவும் இப்படித்தான் பேசுவேன். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்.
நகராட்சியில் உள்ள கால்வாய்கள் துார்வாரும் போது,ஆக்கிரமித்து சிலாப் போட்டு இருந்தால் அவற்றை எடுக்கும் போது, யாரும் குறுக்கிடாமல் பணி செய்யவிட வேண்டும்.
நாங்கள் நடவடிக்கை எடுத்தால் அடுத்தது கவுன்சிலர்களிடம் தான் வருவர்; எனவே, இதுபோன்று நகராட்சிக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் போது, எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வரி வசூல் செய்வதற்கு விழிப்புணர்வு, பாதாளச்சாக்கடை இணைப்புகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
துணைத்தலைவர்: எங்களது வார்டில், புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். ஆடுவதை கூடம் ஏலம், காந்திவாரச்சந்தை நுழை வாயிலில் கட்டணம், பூமார்க்கெட் ஏலம் சம்பந்தமான தீர்மானத்துக்கு ஆட்சேபனை தெரிவித்துக்கொள்கிறேன்.