/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேரம்பாளையத்தில் ரூட் பஸ் நிறுத்தப்படுமா? பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதி
/
தேரம்பாளையத்தில் ரூட் பஸ் நிறுத்தப்படுமா? பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதி
தேரம்பாளையத்தில் ரூட் பஸ் நிறுத்தப்படுமா? பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதி
தேரம்பாளையத்தில் ரூட் பஸ் நிறுத்தப்படுமா? பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அவதி
ADDED : ஆக 16, 2024 08:16 PM
மேட்டுப்பாளையம்:பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பணியாளர்கள் பயன்பெறும் வகையில், தேரம்பாளையத்தில் அனைத்து ரூட் பஸ்களையும் நிறுத்த, ஆவண செய்யும்படி, கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட பெள்ளாதி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு, கிராம சபை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தேரம்பாளையம் பொதுமக்கள் சார்பில், கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மேட்டுப்பாளையம் -அன்னூர் மெயின் சாலையில் தேரம்பாளையம் உள்ளது. தேரம்பாளையத்தை சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர்.
திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கும், கோவைக்கும், 500க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். மேட்டுப்பாளையம் அன்னூர் இடையே ஒரு மணி நேரத்திற்கு, ஒரு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. 15 நிமிடத்திற்கு ஒரு முறை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, தேனி ஆகிய ஊர்களுக்கு செல்லும், ரூட் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தேரம்பாளையத்தில் அரசு ரூட் பஸ்கள் நிறுத்துவதில்லை. அதனால் காலையில் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும், டவுன் பஸ்ஸுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. மாலை மற்றும் இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர், அவிநாசி, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் அரசு ரூட் பஸ்களில், தேரம்பாளையம் பயணிகளை ஏற்றுவதில்லை.
பொதுமக்களின் கோரிக்கையை, கிராம சபையில் தீர்மானமாக நிறைவேற்றி, மாவட்ட கலெக்டருக்கும், வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.
மனுவைப் பெற்ற ஊராட்சி தலைவர் பூபதி குமரேசன், இது குறித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

