ADDED : ஜூன் 20, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர், : மதுக்கரையை அடுத்த திருமலையாம்பாளையம், ஆண்டவர் நகரை சேர்ந்தவர் ரமேஷ், 43; டிரைவர். நேற்று காலை தனது மகளுடன் பைக்கில் பாலத்துறை ரோட்டில் வந்தார்.
பாலத்துறை பிரிவில் மகளை இறக்கிவிட்ட பின், பைபாஸ் நோக்கி வரும்போது பின்னால் வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது.
இதில் சாலையில் விழுந்த ரமேஷ் மீது, லாரியின் பின் சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுக்கரை போலீசார் டிப்பர் லாரி டிரைவரான குரும்பபாளையத்தை சேர்ந்த கணேஷிடம் விசாரணை நடத்தினர்.