sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நண்பரிடம் ரூ.18.75 லட்சம் மோசடி; போலீஸ் விசாரணை

/

நண்பரிடம் ரூ.18.75 லட்சம் மோசடி; போலீஸ் விசாரணை

நண்பரிடம் ரூ.18.75 லட்சம் மோசடி; போலீஸ் விசாரணை

நண்பரிடம் ரூ.18.75 லட்சம் மோசடி; போலீஸ் விசாரணை


ADDED : மார் 25, 2024 01:02 AM

Google News

ADDED : மார் 25, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை லிங்கப்பச்செட்டி வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 47; நுால் வியாபாரம் செய்து வருகிறார். 2017ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பெனிஸ்,45 என்பவர் அறிமுகமானார்.

இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பெனிஸ் பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் பெனிஸ், விஜயகுமாரிடம் தனது தொழிலில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் அதில் வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி விஜயகுமார் பல்வேறு தவணைகளாக, ரூ.18.75 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

அதன் பின் பெனிஸ் பழைய கார்களை வாங்கி, விற்று எந்த லாப பணத்தையும் தரவில்லை. விஜயகுமார் தனது பணத்தை திருப்பித் தருமாறு, பலமுறை கேட்டு வந்தார்.

பெனிஸ் தராமல் ஏமாற்றி வந்தார். விஜயகுமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பெனிஸ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us