sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'அன்றைய பாடத்தை அன்றே படித்தேன்'

/

'அன்றைய பாடத்தை அன்றே படித்தேன்'

'அன்றைய பாடத்தை அன்றே படித்தேன்'

'அன்றைய பாடத்தை அன்றே படித்தேன்'


ADDED : மே 11, 2024 12:45 AM

Google News

ADDED : மே 11, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மூன்று பாடங்களில் சென்டம் பெற்று, 500க்கு 498 மதிப்பெண் பெற்று, சிறப்பிடம் பிடித்துள்ளார் மாணவி தீபிகா.

கோவை, காரச்சேரி பகுதியைச் சேர்ந்த ஆறுச்சாமி - அம்பிகா தம்பதியின் மகள் தீபிகா. ஒத்தக்கால்மண்டபம் பி.எம்.ஜி.,மெட்ரிக் பள்ளி மாணவியான இவர், 500க்கு 498 மதிப்பெண் பெற்றுள்ளார். கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் சென்டம் பெற்றுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.

மாணவி தீபிகா கூறுகையில், எனது அப்பா லாரி ஓட்டுநர்; அம்மா விவசாயி. பள்ளியில் தரும் வீட்டுப் பாடங்களை தொடர்ந்து சரியாக செய்து வந்தேன். அன்றைய பாடங்களை அன்றைக்கே படித்து விடுவேன். தேர்வு சமயங்களில் அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து படிப்பேன். அதுவே நான் அதிக மதிப்பெண் பெற உதவியாக இருந்தது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த பக்கபலமாக இருந்தனர். பிளஸ் 1ல் கணிதத்துடன் கூடிய கணினி அறிவியல் படிப்பைத் தேர்ந்தெடுக்க உள்ளேன், என்றார்.






      Dinamalar
      Follow us