sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது

/

சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது

சட்டவிரோதமாக மதுபானம் கள் விற்பனை: 5 பேர் கைது


ADDED : ஜூன் 21, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்;நெகமம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதில், நெகமம் - ரங்கம்புதூர் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே, நெகமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன், 39, என்பவரிடம் இருந்து ஐந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வடசித்தூர் டாஸ்மாக் மதுக்கடை அருகே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ், 24, என்பவரிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததற்காக இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் நாகராஜ், 57, என்பவர் தோப்பில் இருந்து 2 லிட்டர் கள் மற்றும் கந்தசாமி, 62, என்பவர் தோப்பில் இருந்து 3 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

சொக்கனுரை சேர்ந்த பிரபு, 28, என்பவரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் மற்றும் 2 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யபப்ட்டது. சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் கள் விற்றதாக, மூன்று பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us