/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் 'செஸ்' இந்திய வீரர் 6 புள்ளிகளுடன் முன்னிலை
/
ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் 'செஸ்' இந்திய வீரர் 6 புள்ளிகளுடன் முன்னிலை
ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் 'செஸ்' இந்திய வீரர் 6 புள்ளிகளுடன் முன்னிலை
ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் 'செஸ்' இந்திய வீரர் 6 புள்ளிகளுடன் முன்னிலை
ADDED : செப் 04, 2024 12:31 AM

கோவை;ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியின், ஏழாவது சுற்றில் புனேவை சேர்ந்த அக் ஷய், 6 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 26வது ஐ.எம்., நார்ம்ஸ் குளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, அலங்கார் ஹோட்டலில் கடந்த, 30ம் தேதி துவங்கியது. இதில், நம் நாட்டை சேர்ந்த ஆறு பேர், ரஷ்யா, ஸ்லோவாகியா, உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என, 10 பேர் பங்கேற்றுள்ளனர்.
நேற்றைய ஏழாவது சுற்றில், டில்லியை சேர்ந்த பவார் ஹர்ஷித், ரஷ்யாவின் கோசெலாக்ஷ்வி டேவிட்டை வென்றார். இந்தியாவை சேர்ந்த ரோஹித் மற்றும் ஹர்ஷத் ஆகியோருக்கு இடையேயான போட்டி சமனில் முடிந்தது. துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி, இந்தியாவின் பார்கன்கர் அக் ஷயிடம் தோல்வியடைந்தார்.
முடிவில், இந்தியாவின் பார்கன்கர் அக்ஷய், 6 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். அடுத்து, இந்தியாவின் பவார் ஹர்ஷித், 4.5 புள்ளிகளும், ஸ்லோவாகியாவின் மாணிக் மிகுலாஸ், 4 புள்ளிகள், ரஷ்யாவின் கோசெலாக்ஷ்வி டேவிட், 4 புள்ளிகள், இந்தியாவை சேர்ந்த ஹர்ஷத், தக் ஷின் அருண் ஆகியோர் தலா, 3.5 புள்ளிகளுடன் உள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த ரோஹித், 3 புள்ளிகள், உஸ்பெகிஸ்தானை சேர்ந்த வாகிடோவ் டாயிர், 3 புள்ளிகள், இந்தியாவின் லோகேஷ் 2.5 புள்ளிகள், துர்க்மெனிஸ்தானின் அன்னகெல்டுவேய் ஓராஸ்லி, 1 புள்ளியும் பெற்றிருந்தனர். இன்று எட்டாவது சுற்று போட்டி நடக்கிறது.