/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே! விவசாய கருத்தரங்கில் தகவல்
/
சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே! விவசாய கருத்தரங்கில் தகவல்
சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே! விவசாய கருத்தரங்கில் தகவல்
சமவெளியில் ஏற்றுமதி தரத்தில் மிளகு சாகுபடி சாத்தியமே! விவசாய கருத்தரங்கில் தகவல்
ADDED : ஏப் 29, 2024 01:19 AM

பொள்ளாச்சி;ஈஷாவின் காவேரி கூக்குரல் சார்பில், 'லட்சங்களை அள்ளித்தரும் சமவெளியில் மிளகு சாத்தியமே' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை முன்னோடி மிளகு விவசாயி வள்ளுவனின், சத்குரு சந்நிதி இயற்கை விவசாயப் பண்ணையில் நடந்தது.
இதில், வேளாண் விஞ்ஞானிகள், முன்னோடி மிளகு விவசாயிகள், புதிய ரக மிளகை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றவர்கள் எனப் பல வல்லுநர்கள் கலந்து கொண்டு, மிளகு சாகுபடி குறித்த தகவல்களை, விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டனர்.
மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயி வள்ளுவன் பேசியதாவது: சமவெளியில் மிளகு சாத்தியமா என்ற கேள்வி எனக்குள்ளும் இருந்தது. ஆனால் ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் இது சாத்தியமாகி உள்ளது.
பலப்பயிர் பல அடுக்கு முறை இங்கே பின்பற்றப்படுவதால், மைக்ரோ கிளைமேட் நிலை இயல்பாகவே உருவாகியுள்ளது. எனது தோட்டத்தில் தோராயமாக, 2 டன் மிளகு மகசூல் கிடைப்பதால் குறைந்தது, 16 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்ட முடிகிறது.
தென்னைக்குள் குறிப்பாக மரம் பயிர் சாகுபடியோடு இணைந்து மிளகு சாகுபடி செய்வது லாபகரமாக உள்ளது.
இவ்வாறு, பேசினார்.
இந்திய நறுமணப் பயிர்கள் வாரியத்தின் இணை இயக்குனர் கனக திலீபன், மிளகை எளிமையாக ஏற்றுமதி செய்வது எப்படி? என்ற தலைப்பில் பேசினார். மிளகு சாகுபடியில் முன்னோடி விவசாயி நாகரத்தினம் 'மிளகை மதிப்புக் கூட்டலாம் வாங்க' என்ற தலைப்பில் தனது தோட்டத்தில் மிளகு விளைவித்து, அதனை எப்படி மதிப்பு கூட்டி லாபம் ஈட்டுகிறேன் என விளக்கினார்.
அகளி மிளகில் காப்புரிமை பெற்ற முன்னோடி விவசாயி ஜார்ஜ் மற்றும் அஸ்வினி, ஸ்வர்ணா மற்றும் ப்ரீத்தி என மூன்று புதிய மிளகு ரகங்களை கண்பிடித்த முன்னோடி விவசாயி பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். தொடர்ந்து, பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி நடந்தது.

