ADDED : மார் 07, 2025 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கு.வடமதுரை, சின்னதடாகம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட, வீரபாண்டி, மாரியம்மன் கோவில், தடாகம், ஆனைகட்டி மற்றும் கோபனாரி சுற்றுப்பகுதிகளில், நிர்வாக காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, இப்பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், ஜனவரி மாத மின் கட்டணத்தையே மார்ச் மாதத்துக்கும் செலுத்தலாம் என, கு.வடமதுரை செயற்பொறியாளர், சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.