sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவேகானந்தர் கோப்பையை தட்டியது கற்பகம் பல்கலை

/

விவேகானந்தர் கோப்பையை தட்டியது கற்பகம் பல்கலை

விவேகானந்தர் கோப்பையை தட்டியது கற்பகம் பல்கலை

விவேகானந்தர் கோப்பையை தட்டியது கற்பகம் பல்கலை


ADDED : மார் 11, 2025 04:07 AM

Google News

ADDED : மார் 11, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த வாலிபால் போட்டியில், கற்பகம் பல்கலை அணி முதல் பரிசை வென்றது.

பெரியநாயக்கன்பாளையம் சுவாமி விவேகானந்தர் உடற்கல்வியியல் கல்லுாரியில், சுவாமி விவேகானந்தர் கோப்பைக்கான வாலிபால் போட்டி, இரு நாட்கள் நடந்தது. மாநில அளவிலான இப்போட்டியில், தமிழகத்தில் சிறந்த எட்டு கல்லுாரி அணிகள் பங்கேற்றன.

'லீக்' மற்றும் 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த அரையிறுதி போட்டியில், கற்பகம் பல்கலை அணி, எஸ்.டி.சி., கல்லுாரி அணியை, 3-2 என்ற செட் கணக்கில் வென்றது. இறுதிப் போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் அணியுடன், கற்பகம் பல்கலை மோதியது.

இதில், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, கற்பகம் பல்கலை அணி முதல் இடம் பிடித்தது.

வெற்றி பெற்ற அணியினரை, கற்பகம் கல்வி குழுமங்களின் தாளாளர் வசந்தகுமார், முதன்மை கல்வி இயக்குனர் முருகையா, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us