sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மது போதையில் தொழிலாளியை அடித்து  கொன்றவருக்கு ஆயுள்சிறை

/

மது போதையில் தொழிலாளியை அடித்து  கொன்றவருக்கு ஆயுள்சிறை

மது போதையில் தொழிலாளியை அடித்து  கொன்றவருக்கு ஆயுள்சிறை

மது போதையில் தொழிலாளியை அடித்து  கொன்றவருக்கு ஆயுள்சிறை


ADDED : செப் 06, 2024 03:06 AM

Google News

ADDED : செப் 06, 2024 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;மது போதையில் ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை அடித்து கொன்றவருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள கோட்டூரை சேர்ந்த மகாலிங்கம்,32, என்பவர் ஆனைமலை, திவான்சாபுதுாரிலுள்ள தென்னை நார் மில்லில் வேலை செய்து வந்தார். அதே மில்லில், உடுமலை அருகேயுள்ள தொப்பம்பட்டியை சேர்ந்த செல்வராஜ்,45, என்பவரும் வேலை செய்தார். கடந்த 2022, பிப்., 5 ல், இருவரும் சேர்ந்து மது குடித்த போது, அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த செல்வராஜ், தென்னை மட்டையால் மகாலிங்கம் தலையில் அடித்து கொலை செய்தார்.

புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் விசாரித்து, செல்வராஜை கைது செய்தனர். இவர் மீது, கோவை மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி பத்மா, குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜிக்கு, ஆயுள்சிறை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.அரசு தரப்பில் வக்கீல் கணேசன் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us