sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'குட்டி காவலர்கள்' திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்

/

'குட்டி காவலர்கள்' திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்

'குட்டி காவலர்கள்' திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்

'குட்டி காவலர்கள்' திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் துவக்கம்


ADDED : ஆக 10, 2024 12:54 AM

Google News

ADDED : ஆக 10, 2024 12:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை பீளமேடு மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 'குட்டிக் காவலர்கள்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சாலை போக்குவரத்து விதிகள் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்த பள்ளியில் 'குட்டிக் காவலர்கள்' திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பீளமேடு போக்குவரத்து ஆய்வாளர் பெருமாள் துவக்கி வைத்தார்.

பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா கூறியதாவது:

அனைத்து மாணவர்களும் போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் சிக்னல் பற்றி அறிந்து இருப்பது அவசியம். அதற்காக குட்டிக் காவலர்கள் திட்டத்தை துவங்கி இருக்கிறோம். இந்த திட்டத்தின் வாயிலாக, மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து குறித்து கற்றுக் கொடுக்கிறோம்.

எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு, ஆசிரியர்கள் குழுவாக சென்று பெற்றோர்களிடம் குழந்தைகளை சுகாதாரமாக பராமரித்து, தவறாமல் பள்ளிக்கு அனுப்பும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு, அவர்கூறினார்.






      Dinamalar
      Follow us