sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு; மதநல்லிணக்கத்தை வலியுறுத்திய விழா

/

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு; மதநல்லிணக்கத்தை வலியுறுத்திய விழா

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு; மதநல்லிணக்கத்தை வலியுறுத்திய விழா

மாரியம்மன் கோவில் தேரோட்டம் நிறைவு; மதநல்லிணக்கத்தை வலியுறுத்திய விழா


ADDED : மார் 07, 2025 10:42 PM

Google News

ADDED : மார் 07, 2025 10:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், இஸ்லாமியர்கள், அம்மனுக்கு சீர் வரிசை செய்தனர்.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த, 11ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, வெங்கட்ரமணன் வீதியில் நேற்றுமுன்தினம் நிலைநிறுத்தப்பட்ட தேர், இரவு வடம் பிடித்து சத்திரம் வீதிக்கு சென்றது.

பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசல் சார்பாக, இஸ்லாமியர்கள், அம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு சென்று, கோவில் பரம்பரை அறங்காவலர் மாணிக்கம், அவரது மகன் ஹரிஹரசுதன், கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினர். கோவில் நிர்வாகம் சார்பில், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் பக்தர்களுக்கு ஜூஸ் வழங்கப்பட்டது.பெரிய பள்ளி நிர்வாகிகள் தலைவர் ஹாஜி ஜாகீர் உசேன், செயலாளர் ஹாஜி அன்வர் பாஷா, பொருளாளர் முஸ்தாக் அகமது, நகராட்சி கவுன்சிலர் சாந்தலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நல்விடியல் சமூக நல அறக்கட்டளை, பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், மதநல்லிணக்க குளிர்பான விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங், விழாவை துவக்கி வைத்தார். போலீசார், அமைப்பினர், பொதுமக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது.

சத்திரம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேரில், நேற்று இரவு அம்மனுக்கும், விநாயக பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது. அதன்பின், சந்திரம்வீதி, மார்க்கெட் ரோடு வழியாக கோவில் வளாகத்தில் தேரோட்டம் நிறைவடைந்தது. அதன்பின், பாரிவேட்டை, தெப்பத்தேர் வைபவம் நடந்தது.






      Dinamalar
      Follow us