/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னைகளுக்கு இடையே புதினா விவசாயம் ஜோர்
/
தென்னைகளுக்கு இடையே புதினா விவசாயம் ஜோர்
ADDED : மே 16, 2024 10:46 PM

மேட்டுப்பாளையம்:காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக புதினா பயிரிடப்படுவது, தற்போது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து விவசாயி பிரேம்குமார் கூறியதாவது:
தென்னை மரங்களுக்கு இடையே ஊடு பயிராக புதினா அதிக அளவில் பயிரப்படுகிறது. புதினாவை விவசாயம் செய்வது மிகவும் எளிது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் கட்டினால் போதும். தென்னைக்கு விடும் தண்ணீரே பெரும்பாலும் போதுமானதாக இருக்கும்.
புதினா இலைகளை பறிக்க பறிக்க மீண்டும் வரும். இதனால் புதினா செடிகளை ஒரு முறை நடவு செய்தாலே, நீண்ட காலம் விவசாயம் செய்யலாம். மேலும் புதினா விவசாயத்தால், தென்னை மரங்களுக்கு கீழ் பகுதிகளில், களை செடிகள் வளருவது மிகவும் குறைவு.
தென்னை மரங்களுக்கு புதினா செடிகள் ஊட்ட சத்தாகவும் செயல்படுகிறது. தென்னையில் காய்கள் அதிகம் காய்க்கிறது. புதினாவால் இரட்டிப்பு வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.----

