/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மறைமலை அடிகளுக்கு மணிமண்டபம் வேண்டும்'
/
'மறைமலை அடிகளுக்கு மணிமண்டபம் வேண்டும்'
ADDED : ஜூலை 14, 2024 11:03 PM
கோவை;உலகத் தமிழ் நெறிக்கழகம் சார்பில், தமிழறிஞர் மறைமலை அடிகளார் பிறந்த நாள் விழா, கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள, அண்ணாமலை ஓட்டல் அரங்கில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பேராசிரியர் குழந்தைவேலு தலைமை வகித்தார். உலகத் தமிழ் நெறிக்கழக செயலாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எழுத்தாளர் சூரியகாந்தன் பேசுகையில், ''சைவத்தையும், தனித்தமிழையும் தனிக்கவனத்துடன் வளர்த்தவர் மறைமலை அடிகள். சென்னை பல்கலைக்கழகத்தில், தமிழுக்கு அங்கீகாரம் அளிக்காததால், தனது பணியை துறந்தவர்.
54 நுால்களை எழுதியுள்ளார். அவர் பெரம்பூரில் வாழ்ந்த இல்லத்தை அரசு சீரமைத்து, அங்கு அவருக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும்,'' என்றார்.
வெள்ளலுார் தமிழ் சங்கத் தலைவர் மாரியப்பன், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். உலகத் தமிழ் நெறிக்கழக நிர்வாகிகள் குரு பழனிசாமி, வள்ளியப்பன், மாணிக்கவாசகம், இருகூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.