/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கார் சாம்பியன்ஷிப் ஆதித்யா தாகூர் முதலிடம்
/
தேசிய கார் சாம்பியன்ஷிப் ஆதித்யா தாகூர் முதலிடம்
ADDED : ஜூலை 29, 2024 03:28 AM

கோவை;கோவையில் நேற்று துவங்கிய தேசிய அளவிலான எப்.எம்.எஸ்.சி.ஐ., கார் ராலி சாம்பியன்ஷிப் மூன்றாம் சுற்றில், ஆதித்யா தாகூர் முதலிடம் பிடித்தார்.
புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ., இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் 2024-ன் மூன்றாம் சுற்றுப்போட்டிகள் கோவையில் நடந்தன.
எட்டு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 67 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் நாள் போட்டிகள், எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் உள்ள எஸ்.எம்., ஆக்ரோ வளாகத்திலும், இரண்டாம் நாள் போட்டிகள் கேத்தனுாரிலும் நடந்தன.
வெற்றி பெற்றவர்கள்
ஐ.என்.ஆர்.சி., ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில் ஆதித்யா தாகூர், விரேந்தர் கேஷப் முதலிடம், கர்ணா கடூர், மூசா செரிப் இரண்டாம் இடம் பிடித்தனர்.
ஐ.என்.ஆர்.சி., 2 ஆதித்யா தாகூர், விரேந்தர் கேஷப்; ஐ.என்.ஆர்.சி., 3 பிரிவில் ஜீட் ஜாபக், சேகர்; ஜே.என்.ஆர்.சி., பிரிவில் அபின் ராய், மொய்தீன் ஜஷீர்; பெண்கள் பிரிவில் ஹர்சிதா ராஜ் கவுடா, பிரமோத் ராமன்; கிளாசிக் பிரிவில் அனீஷ்நாத், அனீஷ் அமிதா; ஜிப்சி பிரிவில் பல்ஜிந்தர் சிங், கவுதம் வெவ்வேறு பிரிவுகளில், முதலிடம் பிடித்தனர்.